தொலைநோக்கு
இலங்கையின் பொதுச்சேவை வழங்குனர்களில் முற்போக்கானவர்கள்
பணிக்கூற்று
நல்லாட்சித் தத்துவத்தின் அடிப்படியில் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி அரச கொள்கைகளை அனுசரித்து குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான தரமான வழங்கும் நிலையை அடைதல்
.
வெண்கலசெட்டிகுள பிரதேச செயலக வரலாறு
தற்போதைய வவுனியா மாவட்டத்தின் மேற்கு எல்லையாக வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவு திகழ்கின்றது .செட்டிகுளம் என்ற பெயரை கி .பி 3 ம் நூற்றாண்டிலேயே கொண்டிருந்தது .கி .பி 199 இல் வீரநாராயணச் செட்டி என்பவர் ஈழத்தின் மேற்குகரையை ஆண்ட அல்லிராணி என்பவருக்கு முத்துக்கள் கொடுப்பதற்காக காப்பாச்சி எனும் கிராமத்துக்கு வந்தார் .அங்கு சந்திர ஈஸ்வரர் என்ற ஆலயத்தை கட்டி அதற்கென ஒரு கேணியும் அமைத்தததுடன் ஆலயத்தில் வெங்கலத்திலான சிவன் சிலையும் பிரதிஸ்டை செய்ததுடன் பாழடைந்திருந்த குளம் ஒன்றை புணரமைத்து செட்டிகுளம் எனப்பெயரிட்டார் .வெங்கலத்திலான சிவன் சிலையால் ஈர்க்கப்பட்ட மக்கள் செட்டியின் மறைவிற்கு பின் வெங்கலசெட்டிகுளம் என அழைக்கலாயினர் .
பல்வேறு சிற்றசர்கள் மற்றும் அந்நிய படையெடுப்புகளின் பின் 1963 இல் உருவாக்கப்பட்ட இறைவரி முகவர் (DRO) நிர்வாகத்தின் கீழ் 05 கிராம சேவையாளர் பிரிவுகளாகவும் உருவாக்கப்பட்டது .பின் 20 கிராம சேவையாளர் பிரிவாக்கப்பட்டு உதவி அரசாங்க அதிபரின் கீழ் நிர்வகிக்கப்பட்டது .1992 இல் உருவாக்கப்பட்ட பிரதேச செயலாளரின் நிர்வாக நடைமுறையில் தற்போது உள்ளது.

























